உள்ளூர் செய்திகள்

கரூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-06-02 07:08 GMT   |   Update On 2023-06-02 07:08 GMT
  • கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் கோபிகா. இவர் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை வேல்முருகன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News