உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

Published On 2023-04-23 06:31 GMT   |   Update On 2023-04-23 06:31 GMT
  • பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
  • கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது

கரூர்:

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

15வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புனரமைப்பது, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது, பள்ளிகளில் புதிய சமையலறை கூடம் கட்டுதல் ஆகியற்றை வேகமாக முடிக்க வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News