உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே இருதரப்பினர் மோதல்

Published On 2023-02-10 15:15 IST   |   Update On 2023-02-10 15:15:00 IST
  • குளித்தலை அருகே இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்
  • இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

குளித்தலையை அடுத்த கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 27), கூலி தொழிலாளி. இவர் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த இளையராஜா (35), அவரது மனைவி சுசிலா (30, ஆகியோர், எங்கள் விவசாய நிலத்தில் இயற்கை உபாதை கழிக்கலாமா" என கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். இதில், அம்பிகா, இளையராஜா, சுசிலா மூவரும் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பிகா கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News