உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் மீது வழக்கு பதிவு

Published On 2023-08-21 03:24 GMT   |   Update On 2023-08-21 03:24 GMT
  • தளவாபாளையம் பகுதியில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
  • மளிகை கடையில் இருந்து ஏராளமான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ். சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த தளவாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கரிகாலன் (52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News