உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2023-09-06 13:42 IST   |   Update On 2023-09-06 13:42:00 IST
  • நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சொத்தை கிரையம் வாங்கியுள்ளார்

கரூர்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பழமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(வயது 43). இவர் பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, இவரது மனைவி சரஸ்வதி, மகள் சந்தியா, மகன் நிதிஷ் மற்றும் அவரது உறவினர்கள் தேவேந்திரன், சசி ஆகியோரிடம் இருந்து அவர்களுக்கு சொந்தமான சொத்தை கிரையம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வடிவேலுக்கு சொந்தமான கிரயம் எழுதிக் கொடுத்த சொத்துக்களை மேற்கண்ட 6 பேரும் சொத்தை அபகரிக்கும் நோக்கோடு கிரயம் கொடுத்த பின்பும் அந்த வீட்டில் குடியிருந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வடிவேல் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் இடத்தை காலி செய்ய மறுத்து வடிவேலையும், அவரது மனைவி பானுப்பிரியாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவேல் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News