உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு

Published On 2023-11-14 04:15 GMT   |   Update On 2023-11-14 04:15 GMT
  • வேலாயுதம்பாளையத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
  • காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை

கரூர், 

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்திற்கு பிறகும் காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீசார் நீண்ட நேரமாக அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News