உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2023-09-25 13:59 IST   |   Update On 2023-09-25 13:59:00 IST
  • தவுட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு நடந்துள்ளது
  • வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி( 60). இவரது மனைவி மீனாட்சி (வயது 53) . இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6பவுன் தங்க நகை மற்றும் பணம் 10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மீனாட்சி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சற்று தூரம் ஓடி சென்று நின்று கொண்டது. பட்டப் பகலில் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேலாயுதம்பாளையத்தில் தொடர்ந்து கொள்ளையடித்துச் செல்வதும் ,சாலை வழியாக வரும் பெண்களை குறி வைத்து வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை நடப்பதும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் பைக் திருட்டு நடப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News