உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் கைது

Published On 2023-04-21 07:36 GMT   |   Update On 2023-04-21 07:36 GMT
  • பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் கைது செய்யபட்டான்
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்:

கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, புலியூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளான். இது குறித்து, தான்தோன்றிமலை கிராம நல அலுவலர் விஜயா, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.


Tags:    

Similar News