வேளாண் பொருட்கள் ரூ21.52 லட்சத்துக்கு விற்பனை
- சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ21.52 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
- 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 42.91 1/2 குவிண்டால் எடை கொண்ட 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.24.69-க்கும், சராசரி விலையாக ரூ.27.89-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
அதேபோல் 241.86 குவிண்டால் எடை கொண்ட516-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.85.89-க்கும், சராசரி விலையாக ரூ.90.59-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.99-க்கும், சராசரி விலையாக ரூ.87.89-க்கும் என மொத்தம் ரூ.20லட்சத்து35ஆயிரத்து037 -க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 21 லட்சத்து52 ஆயிரத்து 862-க்கு விற்பனையானது.