உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற 10 பேர் மீது நடவடிக்கை

Published On 2023-08-08 07:38 GMT   |   Update On 2023-08-08 07:38 GMT
  • கரூர் மாவட்டத்தில் குட்கா விற்ற 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
  • புகையிலை உள்ளிட்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கரூர்,

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் குட்கா விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கரூர் மாநகரம், வெங்க மேடு,பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, வெள்ளியணை, சின்னதாராபுரம், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பாலவிடுதி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.அப்போது, பெட்டிக்கடை, மளிகைகடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர் மீது போலீ சார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட் டவர்கள் அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News