உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை

Published On 2023-06-23 13:13 IST   |   Update On 2023-06-23 13:13:00 IST
  • கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
  • கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரூர்,

கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையில் கிடங்கு மேலாளர், தாசில்தார், உதவி மேலாளர் உட்பட அதிகாரிகள் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது விற்பனையாகும் கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்ய கோவை முதுநிலை மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 15 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம், இந்த மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 17 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம் அபராதமாக பெறப்பட்டு அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு அதில்


Tags:    

Similar News