உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2023-06-15 13:38 IST   |   Update On 2023-06-15 13:38:00 IST
  • கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
  • தான்தோன்றி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

கரூர்,

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் வசந்தி (வயது 21). இவர், காந்தி கிராமத்தில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பழக்கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற வசந்தி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் அமுதா கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News