உள்ளூர் செய்திகள்

தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2023-07-20 12:47 IST   |   Update On 2023-07-20 12:47:00 IST
  • நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தவரை தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
  • புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் ஹை ஸ்கூல் மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வசித்து வருபவர் வினோத்குமார்(வயது 36). இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (19) என்பவர் வினோத்குமாரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வினோத் குமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அஜயை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News