உள்ளூர் செய்திகள்
- நங்காச்சி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்
கரூர்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாயவன் (வயது 18). இவர் அரவக்குறிச்சி அருகே எல்லப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாயவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.