உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-02-14 06:07 GMT   |   Update On 2023-02-14 06:07 GMT
வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

கரூர்,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது உமர் பாரூக் (வயது 23). இவர் சம்வத்தன்று இரவு கரூர்-கோவை சாலை தென்னிலை பகுதியில் சென்று கொண்டி ருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் வேன் இவர் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே முகமது உமர் பாரூக் உயிரிழந்தார். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News