உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
- நடையனூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் பகுதி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்யப்படுவதை பார்த்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.