உள்ளூர் செய்திகள்

லாரிகள் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-09 14:49 IST   |   Update On 2022-12-09 14:49:00 IST
  • லாரிகள் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • நொய்யல் பகுதியில் தண்ணீர் திருடும் கும்பல்

கரூர்

கரூர் மாவட்ட நொய்யல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் கிணற்றில் இருந்து டேங்கர் லாரிகளுக்கு கிணற்றின் உரிமையாளர் தண்ணீரை விற்பனை செய்து வருகிறார்கள். லாரி மூலம் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான நடை தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டுள்ள லாரிகளை பறிமுதல் செய்து தண்ணீர் விற்பனை செய்யும் நபர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News