உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்டத்தில் மது விற்ற 9 பேர் கைது

Published On 2023-11-07 13:28 IST   |   Update On 2023-11-07 13:28:00 IST
  • கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் தலைமையில், போலீசார் பாலவிடுதி, வாங்கல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • 9 பேரை, மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கரூர்

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் தலைமையில், போலீசார் பாலவிடுதி, வாங்கல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 58 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக மருதாயி (வயது 39), பாஸ்கர் (43), நீலமணி (25), கோவிந்தராஜ் (51), ஹானஸ்ட் ராஜா (23), துரைசாமி (40), திலகவதி (50), ராமச்சந்திரன் (47), குமார் (47) உள்பட 9 பேரை, மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News