உள்ளூர் செய்திகள்

மது, குட்கா விற்ற 6 பேர் கைது

Published On 2023-03-19 08:09 GMT   |   Update On 2023-03-19 08:09 GMT
  • மது, குட்கா விற்ற 6 பேர் கைது
  • போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., பெரியசாமி உள்ளிட்ட போலீசார், பள்ளப்பட்டி அலீசா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை குட்கா பொருட்களை, பீடா கடையில் விற்றதாக அப்பாஸ் அலி (வயது 40) என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.இதேபோல கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார், பசுபதி பாளையம், வேலாயுதம்பாளையம், தோகமலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டி னருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மது விற்றதாக பெரியக்காள் (வயது 66), லோக நாதன் (51), தமிழரசன் (34), ஈஸ்வரன், (45), தங்கதுரை (50) ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.


Tags:    

Similar News