உள்ளூர் செய்திகள்
மது பாட்டில்கள் விற்பனை செய்த 5 பேர் கைது
- கரூர் ரெங்கம்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 5 பேர் கைது
- வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், அங்கு வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ் (வயது 35), புன்னம் சத்திரம் பகுதியில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட பெரியரெங்கம்பாளையம் திருமூர்த்தி மனைவி வசந்தா(64), வளர்மதி (52), மலைக் காவலர் தெருவில் மது விற்பனை செய்த குமரேசன் என்கிற மதுரைவீரன்(41), புகழிமலை எதிரே உள்ள கார் ஸ்டாண்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்த ராஜாக்கண்ணு (62) ஆகிய 5 பேர் பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.