உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2022-08-08 12:17 IST   |   Update On 2022-08-08 12:17:00 IST
  • மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர் தப்பி ஓடினார்.
  • வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்

கரூர்:

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி காமாட்சி (வயது 70) இவர் நேற்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நடந்து சென்ற இளைஞர் காமாட்சி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News