உள்ளூர் செய்திகள்

மதுவிற்ற 4 பேர் கைது

Published On 2023-02-02 07:33 GMT   |   Update On 2023-02-02 07:33 GMT
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

கரூர்,

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், தோகைமலை, மாயனுார், லாலாப்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக, கணபதி (வயது 42), முகேஷ் (23), செந்தில்குமார் (44), ராசு (53) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News