உள்ளூர் செய்திகள்

கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகள்-தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

Published On 2023-02-15 08:44 GMT   |   Update On 2023-02-15 08:44 GMT
  • கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
  • மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்

கரூர்:

கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மாயனூர் கதவணை அருகே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் குளிக்க சென்றனர்.முன்னதாக அவர் அங்கு நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் போதிய இடைவேளை கிடைத்ததால் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர்.அப்போது மாணவி ஒருவர் திடீரென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற மாணவிகள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கினர். துரதிஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News