உள்ளூர் செய்திகள்

2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

Published On 2022-11-25 09:29 GMT   |   Update On 2022-11-25 09:29 GMT
  • 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
  • கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

கரூர்:

கரூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிராக போராடி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, குவாரி உரிமையாளர் செல்வக் குமார் (வயது 39), வேன் டிரைவர் சக்திவேல் (24), குவாரி ஊழியர் ரஞ்சித் (43) ஆகிய 3 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் செல்வக்குமார், ஏற்கனவே குண்டர் தடுப்பு, சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சக்திவேல், ரஞ்சித் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சுந்தரவதனம், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News