உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது 11 பேர் கைது

Published On 2023-02-26 06:53 GMT   |   Update On 2023-02-26 06:53 GMT
  • சட்ட விரோதமாக மது 11 பேர் கைது செய்யபட்டனர்
  • அவர்களிடமிருந்து, 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்:

கரூர் மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார்,தோகைமலை, அரவக்குறிச்சி, கரூர் டவுன், மாயனுார் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றதாக மகேந்திரன் (வயது 30), சதீஷ் (32), ராஜூ (28), நாகூர் மீரா (43), ஜலசா (32), ராமசாமி (70), முத்துசாமி, (73), சண்முகம் (58), மணிகண்டன் (32), முத்துசாமி (55), அன்பழகன் (35), ஆகிய, 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

Similar News