உள்ளூர் செய்திகள்

கள்ளபிரான் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருட சேவை

Published On 2023-06-09 08:48 GMT   |   Update On 2023-06-09 08:48 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
  • சுவாமி கள்ளப்பிரான் கருட வாகனத்தில் காட்சி தந்தார்.

தென்திருப்பேரை:

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபி ஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8.30 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிர பந்தம், 12 மணிக்கு சாத்து முறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 9 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர் வீதி உலா நடந்தது.

நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜன், சீனு, ஸ்தல த்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி, மண்டகபடிதாரர் வக்கீல் பிரகாஷ், சீனிவாச அறக்க ட்டளை பத்மநாபன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News