உள்ளூர் செய்திகள்

துளசி மாலைகளை தேர்ந்தெடுத்து வாங்கும் பக்தர்கள்.

நாளை கார்த்திகை மாத பிறப்பு : மாலை, பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

Published On 2023-11-16 07:39 GMT   |   Update On 2023-11-16 07:39 GMT
  • சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.
  • திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல்:

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.

இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப சந்தனமாலை, ருத்ராட்ஷ மாலை, ஸ்படிகமாலை ஆகியவற்றை அணிந்து கொள்வார்கள். விரத நாட்கள் முடிந்த பிறகு மாலைகளை அகற்றி மீண்டும் மறுவருடம் அதனை அணிந்து கொள்வதும், துணை மாலையாக மற்றொரு மாலையை அணிந்து கொள்வதும் வழக்கம்.

அதன்படி திண்டுக்கல் கடைவீதிகளில் பல்வேறு வகையான மாலைகள் ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனையானது. மாலை களில் பொருத்தப்படும் அய்யப்பன் உருவம் பொறித்த டாலர்களும் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இதுதவிர கருப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் வேட்டி, துண்டு, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனையானது.

கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளதை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் வீடுகளிலும் சுத்தம் செய்து தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அய்யப்பன் கோவில் மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளிலும் பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன.

Tags:    

Similar News