உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் காரடையான் நோன்பு விழா

Published On 2023-03-15 14:45 IST   |   Update On 2023-03-15 14:45:00 IST
  • சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.
  • பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.

அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் உற்சவ அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ் வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வளையல், மஞ்சள், சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News