உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே ஆசிரியருக்கு அடி-உதை

Published On 2023-07-28 08:17 GMT   |   Update On 2023-07-28 08:17 GMT
  • கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
  • இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதி காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ராஜன் (வயது 35). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ளார். வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் றோஸ் மகன் ஆஷிக்றோஸ் ஆகியோர் அதே பகுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆஷிக் றோசின் திருமண செலவுக்காக அனிஷ் தனது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆஷிக்றோசுக்கு கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து பணம் வாங்க அனிஷ் மற்றும் அவர் மனைவி டெலிஷா என்பவருமாக சென்றனர். அங்கு பணம் கொடுக்காமல் ஆசிரியர் அனிஷை ஆஷிக் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சி செய்த அனிஷின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் காயமடைந்த அனிஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News