உள்ளூர் செய்திகள்

குமரி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்-கள்ளக்காதலி மீது வழக்கு

Published On 2023-06-02 12:44 GMT   |   Update On 2023-06-02 12:44 GMT
  • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

கன்னியாகுமரி:

பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News