உள்ளூர் செய்திகள்

மதுபானம் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி சாவு

Published On 2023-09-12 14:17 IST   |   Update On 2023-09-12 14:17:00 IST
  • மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
  • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை :

தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது குடி போதையில் மது பானம் என நினைத்து ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை குடித்து விட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். அவரை அவர் மகன் சுஜின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்பு தாசன் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News