உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் மகன் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2023-11-14 07:36 GMT   |   Update On 2023-11-14 07:36 GMT
  • மன வேதனையில் இருந்த ஜேம்ஸ் அளவுக்கு அதிகமாக குடித்து குடித்து வந்துள்ளார்.
  • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி, நவ.14-

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 58), மரம் வேலை செய்யும் தொழிலாளி. இவரது 4-வது மகன் ஜெபன் விக்னேஷ் (27) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன வேதனையில் இருந்த ஜேம்ஸ் அளவுக்கு அதிகமாக குடித்து குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜேம்ஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News