உள்ளூர் செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே தீயில் கருகி பெண் சாவு

Published On 2023-04-12 13:20 IST   |   Update On 2023-04-12 13:20:00 IST
  • சமையல் செய்தபோது உடையில் தீப்பிடித்தது
  • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் வெள்ளிச் சந்தை அருகே உள்ள முட்டம் ஓடை தெருவை சேர்ந்தவர் புருனோ, மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய ரோஸ் (வயது 57). சம்பவத்தன்று மதியம் மரிய ரோஸ் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீப்பிடித்தது. இதனால் அலறி துடித்த அவர் கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் தீக்காயம் அடைந்த மரியரோசை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வெள்ளிச் சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். மரியரோசின் 2 மகள்களும் திருமணமாகி கோவளம் மற்றும் முட்டத்தில் வசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News