உள்ளூர் செய்திகள்

மணப்பாடு கடலில் மூழ்கி பலியான மீனவர் உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன்- பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி

Published On 2023-10-10 07:44 GMT   |   Update On 2023-10-10 07:44 GMT
  • திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
  • புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி

குளச்சல் :

மணப்பாடு கடலில் மீட்கப்பட்ட குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று பிற்பகல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டுமுன் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண் ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பாரதிய ஜனதா தலைவர் கண்ணன், நகர்மன்ற துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News