உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு

Published On 2023-10-26 10:16 GMT   |   Update On 2023-10-26 10:16 GMT
  • மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
  • வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார்.

நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். 70 வயது மதிக்கத்தக்க இவர் வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News