உள்ளூர் செய்திகள்

திருவிதாங்கோட்டில் பைப் லைன் உடைப்பால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-10-14 13:14 IST   |   Update On 2023-10-14 13:14:00 IST
  • பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
  • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தக்கலை :

தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி காட்டாத்துறை பகுதியில் பெரிய நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தக்கலை, திருவிதாங்கோடு, திக்கணங்கோடு, ஆத்திவிளை, முளகுமூடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பைப் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் தக்கலை அருகே கேரளபுரம் செல்லும் சாலையில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் பைப் லைன் உடைக்கப்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இது குறித்து ஆய்வு செய்த போது பல இடங்களில் பைப் லைன் முறையாக பொருத்தாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News