உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Published On 2022-07-31 07:00 GMT   |   Update On 2022-07-31 07:00 GMT
  • இந்த மாதத்தில் விவேகானந்தர் மண்டபத்தை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
  • விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்கு வரத்து காலை 8 மணிக்கு தொடங்கப் படவிலலை. 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பகல் 11 மணிக்கு தான்படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட வந்தனர். விவேகானந்தர் மண்ட பத்தை 1 லட்சத்து 20 ஆயிரத்து 672 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்று லாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற் கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீ சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News