உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே மனைவி வெளிநாடு சென்ற நிலையில் வேன் டிரைவர் திடீர் மாயம்

Published On 2023-09-27 12:59 IST   |   Update On 2023-09-27 12:59:00 IST
  • 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.
  • புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிள்ளியூர் :

படந்தாலுமூடு அருகே உள்ள கள்ளிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுஜிமோள், கடந்த மாதம் 2-ந் தேதி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இதனால் ரெதீஷ், தனது 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 23-ம் தேதி புதிய செங்கல் சூளைக்கு வேலைக்கு போவதாக ரெதீஷ் கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக லாரன்ஸ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News