உள்ளூர் செய்திகள்
சொத்தை தராததால் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன்
- தனது தாயிடம் சொத்துகளை தனது பெயரில் எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார்
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே உள்ள உதச்சிகோட்டை பகுதி மேத்தன்விளையை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சுஜாதா (வயது 44). இவர்கள் மகன் மோனிஷ் (21). மோகன்தாஸ் இறந்து விட்டதால் சுஜாதா தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மோனிஷ் தனது தாயிடம் சொத்துகளை தனது பெயரில் எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார். இதற்கு சுஜாதா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோனிஷ் சம்பவத்தன்று கையில் வெட்டு கத்தியுடன் சென்று தாயை அடித்து காலால் உதைத்துள்ளார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதில் காயமடைந்த சுஜாதா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.