உள்ளூர் செய்திகள்

7010363173 என்ற எண்ணில் கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளிக்கலாம்

Published On 2022-09-14 07:41 GMT   |   Update On 2022-09-14 07:41 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
  • குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்ப னையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை தொடர் பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் ஹெல்ப் லைன் செயல்படு கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

7010363173 என்ற எண் ணுக்கு பொதுமக்கள் நேரடி யாகவும் போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரி களிலும் இந்த ஹெல்ப் லைன் எண்ணை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ- மாணவி கள் இந்த தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். போலீசார் உடனடி நடவடிக்கை மேற் கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா விற்பனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரை 891 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 516 பணம், 27 வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கை பொருத்தமட்டில் இதுவரை 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 287 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

144 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 97 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியாபாரிகள்ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா விற்பனை குறைந் துள்ளதால் அதன் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சாவை கண்காணிக்க 4 சப்-டிவிஷன்களிலும் 7 தனிப் படை அமைக்கப்பட்டு நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. கஞ்சா விற்ப னையை தடுக்க மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News