உள்ளூர் செய்திகள்

மரம் நடுவதை மாணவ-மாணவிகள் குறிக்கோளாக கொள்ள வேண்டும்

Published On 2023-10-15 06:46 GMT   |   Update On 2023-10-15 06:46 GMT
  • வனத்துறை அதிகாரிகள் அறிவுரை
  • வனம் அழிந்தால் மிகப்பெரிய ஆபத்து

நாகர்கோவில் :

வனங்களை பாது காப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவி கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்பேரில், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா உத்தரவின் பேரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வன பகுதிக ளுக்கு சுற்றுலா அழைத்து சென்று வனம், மரங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு கட்டமாக, குமரி மாவட்டம் தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேர், நேற்று வனம் சார்ந்த சுற்றுலா விழிப்புணர்வுக்காக 2 வேன் மூலமாக உதயகிரி கோட்டை உயிரியல் பூங்கா விற்கு அழைத்து செல்லப் பட்டனர். உயிரியல் பூங்காவை மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பல மாணவிகள் இப்போது தான் முதல் முறையாக உதயகிரி கோட்டை, உயிரியல் பூங்கா வுக்கு வந்து உள்ளோம் என தெரிவித்தனர். அவர்க ளுக்கு வனத்தின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. வன பாதுகாவலர் சிவக்கு மார், இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

இயற்கை, காடு, வன விலங்குகள், நீர், ஆக்சிஜன், வெப்பநிலை குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரங்கள், வனம், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக விளக் கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் சிவக்குமார் பேசுகையில், வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்கள் அழிந்தால் தட்ப வெப்ப நிலை மாறி விடும். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 25 சதவீத காடுகள் உள்ளன. இதை 33 சதவீ தத்துக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்க ளில் கண்டிப்பாக மரங்கள் நட வேண்டும் என்றார்.

சமூக காடுகள் சரகம் (நாகர்கோவில்) வன சரகர் ராஜேந்திரன் பேசுகையில், வன விலங்குகளின் சாம்ராஜ்யமாக காடுகள் உள்ளன. காடுகள் அழிந்தால் வன விலங்குகள் மட்டுமன்றி மனித இனமே அழிந்து விடும். காடுகளில் வன விலங்குகளின் சாணம் தான் உரமாக மாறுகிறது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு உட்கொள் ளும். 30 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கும். அதன் சாணம் உரமாகிறது என்றார்.

Tags:    

Similar News