உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2023-10-16 14:22 IST   |   Update On 2023-10-16 14:22:00 IST
  • கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
  • ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை பரிசு பெற்று சாதனை

நாகர்கோவில் :

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில் பங்கேற்றனர். இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை பரிசு பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News