உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறி அருகே பள்ளி மாணவி மாயம்

Published On 2023-10-11 07:43 GMT   |   Update On 2023-10-11 07:43 GMT
  • குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார்.
  • ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

குளச்சல் : 

வில்லுக்குரியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி மாயமாகி விட்டார். இவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காதால் குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மாணவி மாயம் குறித்து குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News