உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது எடுத்த படம் 

குளச்சலில் போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவர்கள் உறுதிமொழி

Published On 2022-11-20 08:17 GMT   |   Update On 2022-11-20 08:17 GMT
  • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
  • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

கன்னியாகுமரி:

உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News