உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2023-10-30 08:04 GMT   |   Update On 2023-10-30 08:04 GMT
  • மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • அருகில் சென்று பார்த்த போது காணிக்கை பணம் சிதறி கிடந்துள்ளது. மேலும் வேல் ஓன்றும் கீழே கிடந்தது.

ராஜாக்கமங்கலம் :

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் ஊர் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.மண்ட பத்துடன் கூடிய இந்தக் கோவிலில் பூசாரியாக முத்துச் செல்வன் பணி யாற்றி வருகிறார்.

இவர் தினமும் மாைல யில் கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். ேநற்று மாலையும் முத்துச் செல்வன் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றார்.

இன்று காைல அவர் ேகாவில் வழியாகச் ெசன்ற ேபாது அங்குள்ள மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்த போது காணிக்கை பணம் சிதறி கிடந்துள்ளது. மேலும் வேல் ஓன்றும் கீழே கிடந்தது.

எனவே யாரோ மர்ம நபர்கள் உண்டியலை, வேல் மூலம் நெம்பி உடைத்தி ருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்த தும் ேகாவில் தலைவர் தர்மலிங்கம், ெசயலாளர் கண்ணன் ஆகிேயார் ராஜாக்கமங்கலம் ேபாலீசில் புகார் ெகாடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News