உள்ளூர் செய்திகள்

காந்தி-காமராஜர் படங்களுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை

Published On 2023-10-03 07:50 GMT   |   Update On 2023-10-03 07:50 GMT
  • கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்
  • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மார்த்தாண்டம் :

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி திருவுருவ சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தி, காமராஜர் படங்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News