உள்ளூர் செய்திகள்

இரணியல் சாய்பாபா அன்பாலயத்தில் யோகா பயிற்சி குறித்து விளக்கும் நிகழ்ச்சி

Published On 2023-11-20 06:41 GMT   |   Update On 2023-11-20 06:41 GMT
  • வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு
  • அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நாகர்கோவில் :

இரணியல் சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயத்தில், மனித வாழ்க்கையில் யோகா பயிற்சியின் சிறப்பை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சீரடி ஸ்ரீ சாய்பாபா அறக்கட்டளை சேர்மன் டாக்டர் கோலப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளாசி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் டாக்டர் மகேஷ், அன்பாலயத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் தலைவர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணாநகர் கோமதி ஆண்டியப்பன் யோகா சென்டர் நிறுவனர் டாக்டர் கோமதி யோகா பயிற்சியின் உடல் ஆரோக்கியத்தின் சிறப்புகளை விளக்கி பேசி, பயிற்சியளித்தார். அவருக்கு அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், சாய் ஒயிட்ஷைன் கோல்டேஜ் ஏஜ் ஹோம் நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News