உள்ளூர் செய்திகள்
- மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- பால் ஊழியர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினரும் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்:
தபால் சேவைகளை கார்ப்பரேட் ஆக மாற்ற நினைக்கும் மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தபால் ஊழியர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினரும் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.