உள்ளூர் செய்திகள்
குளச்சலில் போலீஸ் சார்பில் குறை தீர்க்கும் முகாம்
- 54 மனுக்களுக்கு தீர்வு
- காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காண குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் குளச்சலில் நடந்தது.
இதில் குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சுந்தர மாணிக்கம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, மகளிர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.