நாகர்கோவிலில் நடைபாதையில் நிறுத்திய காருக்கு அபராதம்
- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
- இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு வழி பாதையில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நடைபாதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
வேப்பமூடு முதல் டதி பள்ளி வரை உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டி ருந்தது. போலீசார் காரின் வாகன உரிமையாளரை தேடிப் பார்த்தனர்.
ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து அந்த காருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேராக வந்தவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.